காணொளி: காபூல் தாக்குதலில் காணாமல் போன மகனை தேடும் தாய்
காணொளி: காபூல் தாக்குதலில் காணாமல் போன மகனை தேடும் தாய்
ஆப்கானிஸ்தான் தலைநகர் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று தாக்கப்பட்டதாகவும், இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தடயவியல் ஆய்வக வட்டாரங்கள் பிபிசி-யிடம் தெரிவித்தன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொடலாம் என்றும், அந்த மையத்தில் 2,000 பேர் இருந்தனர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
'இராணுவத் தளங்களையும் பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்புகளையும் குறிவைத்ததாக' கூறி, ஆப்கானிஸ்தானின் கூற்றுகள் பொய்யானவை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு இடையேயான எல்லை மோதல் கடந்த மாதம் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



