தென்னாப்பிரிக்காவில் கறி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு காதலை சொன்னவருக்கு குவியும் வாழ்த்து மற்றும் பிற செய்திகள்

காதல்

பட மூலாதாரம், SPENCER PLATT / getty images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தென்னப்பிரிக்காவில் உள்ள கே.எஃப்.சி உணவகம் ஒன்றில் தனது பெண் தோழியுடன் கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென அதை நிறுத்திவிட்டு தன் தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார்.

அந்த நிகழ்வை அங்கிருந்த கடேகா மலாபோலா என்பவர் பதிவு செய்த காணொளி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #KFCProposal எனும் ஹேஷ்டேகுடன் பரவியது. அந்த இணையைக் கண்டுபிடித்துத் தருமாறு கே.எஃப்.சி வெளியிட்ட பதிவு 19,000 முறைக்கும் மேல் பகிரப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பின்னர் அது பூட் ஹெக்டர் என்பவர் நொன்ஹாங்லா எனும் பெண்ணிடம் காதலைத் தெரிவித்த நிகழ்வு என்று தெரிய வந்தது.

இப்போது மிகவும் பிரபலமாகியுள்ள அந்த இணையின் திருமணத்துக்கு பியர், நிகழ்விடம், தேன் நிலவு செல்வதற்கான முன்பதிவு போன்றவற்றை இலவசமாக செய்து கொடுக்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பலரும் முன்வந்துள்ளனர். பலர் திருமணச் செலவுக்கு பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர்.

ஒரு இதழ் அவர்களுக்காக இரண்டு பக்க செய்தி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சாகேஸ் பான்டிவ்னி எனும் பிரபலமான பாடகர் ஒருவர் அவர்கள் திருமணத்தில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளார்.

Presentational grey line

நரேந்திர மோதி அரசு மீது நேபாளம் கோபத்தில் இருப்பது ஏன்?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக வரையறுக்கப்பட்டு, இந்தியாவின் புதிய வரைபடம் ஒன்றை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த புதிய வரைபடத்துக்கு நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த வரைபடத்தில், உத்தராகண்ட் மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள காலாபானி மற்றும் லிபூ பகுதிகள் இந்தியாவுக்குள் அடங்கியதாக அமைந்துள்ளது.

Presentational grey line

ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?

ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?

பட மூலாதாரம், ANADOLU AGENCY / getty images

இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த இயலாது என மலேசிய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மலேசியா அனுப்பி வைக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறியுள்ளார்.

Presentational grey line

சென்னை காற்று மாசுபாடு

சென்னை காற்று மாசுபாடு

பட மூலாதாரம், NAveen

டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பேசுபொருளாகியுள்ளது.

சென்னை நகரத்தில் ஒரு சில இடங்களில் புகைமூட்டம் போல தென்பட்ட காற்றுமாசுபாடு பற்றிய படங்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து, சென்னை நகரத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

Presentational grey line

ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய ஆதரவு உண்டா?

எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கை தமிழ் பிரஜையொருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை சர்வதேசமயமாக்கவும், தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவுமே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :