மும்பை: தீ விபத்தில் 15 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ

பட மூலாதாரம், Amol rode

கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இருக்கும் விடுதி ஒன்றில், நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டது.

தீ

பட மூலாதாரம், Amol rode

படக்குறிப்பு, கமலா மில்ஸ்

விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், கே ஈ எம் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். ஆறு பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 12 பேர் பாட்டியா மருத்துவமனையிலும், இரண்டு பேர் லோக்மான்ய திலக் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அந்த விடுதியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். தனது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த 28 வயதான பெண் ஒருவரும் இந்த தீ விபத்தில் பலியாகி உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. கட்டடத்தின் மேற்பகுதியில்தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மும்பை மாநகராட்சி ஆணையர் அஜய் மேத்தா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நரேந்திர மோதி உள்ளிட்டோர் இந்தத் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

கமலா மில்ஸ் காம்பவுண்டில், பெருநிறுவன அலுவலகங்கள், ஊடக அலுவலங்கள், பொது விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. அப்பகுதியில் சில கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கமலா மில்ஸ்

பட மூலாதாரம், JANHAVEE MOOLE/BBC

100 பேரை காப்பாற்றிய காவலாளி

அக்கட்டட வளாகத்தில் காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்த மகேஷ் சப்லே தீயிலிருந்து 100-150 பேரை காப்பாற்றியுள்ளார்.

விபத்து ஏற்பட்ட அதே கட்டடத்தில் உள்ள மொசொன்ஸ் உணவகத்தில் இருந்த பலரும் தீயில் சிக்கிக் கொண்டனர். தீயிலிருந்து தப்பிக்க அங்குள்ள கழிப்பறைக்குள் புகுந்து கொண்ட சிலர், அங்கேயே உயிரிழந்தனர்.

மகேஷ் சப்லே

பட மூலாதாரம், JANHAVEE MOOLE/BBC

படக்குறிப்பு, காவலாளி மகேஷ் சப்லே

நுழைவாயிலில் இருந்த காவலாளி மகேஷ், கட்டடத்தில் இருந்தவர்களை உடனடியாக எச்சரித்தார்.

மேலும் இரண்டு காவலாளிகளான சூரஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் அனைவரையும் எச்சரித்து, கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேற உதவி செய்தனர்.

பிபிசி செய்தியாளர் ஜானவி மூலே அளித்த தகவலின்படி, தீ விபத்திலிருந்து 100-150 பேரை காவலாளி மகேஷ் சப்லே காப்பாற்றியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :