கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று மேலும் 76 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இதுவரை தமிழ்நாட்டில் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596ஆக உயர்ந்துள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 178 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்ந்துள்ளது.
ஆகவே தற்போது கொரோனா நோய்க்காக சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 940ஆக உள்ளது. இன்று உயிரிழந்தவருடன் சேர்த்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா நோய் தாக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடுகளில் 22,254 பேரும் அரசின் தனிமைப்படுத்தும் விடுதிகளில் 145 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 53,045 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா நோய் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 1917 பேர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர்.

இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 76 பேரில் 55 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவந்த 25க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக இதுவரை 358 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












