‘நேட்டோவிடமிருந்து அமெரிக்காவிற்கு எதுவும் தேவையில்லை’: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவின் மூலம் நேட்டோ அமைப்பை (NATO) விமர்சித்துள்ளார்.
அவர் அந்தப் பதிவில், "தற்போது ராணுவ ரீதியாக முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள ஒரு 'பித்துப்பிடித்த நாடான' இரானின் விஷயத்தில் நேட்டோ நாடுகள் நமக்கு சிறிதும் உதவவில்லை. அமெரிக்காவிற்கு நேட்டோவிடமிருந்து எதுவும் தேவையில்லை, ஆனால் இந்த முக்கியமான விஷயத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
'ஹோர்மூஸ் நீரிணையை' திறக்க கடற்படையை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
டொனால்ட் டிரம்ப் மார்ச் 14 அன்று ட்ரூத் சோஷியலில், "சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளும் இப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பும் என்று நம்புகிறேன், இதன் மூலம் முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரு நாட்டினால் ஹோர்மூஸ் நீரிணைக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது. எவ்வாறாயினும், நாம் விரைவில் ஹோர்மூஸ் நீரிணையை பாதுகாப்பானதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவோம்" என்று தெரிவித்தார்.