மத்தியப்பிரதேச மாநில அரசியல் சர்ச்சை: "பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - முதல்வர் கமல்நாத் ராஜிநாமா அறிவிப்பு

கமல்நாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமல்நாத்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் பதவியை தான் ராஜிநாமா செய்யப்போவதாக போபாலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மாநில ஆளுநரிடம் இன்று (மார்ச் 20) தனது ராஜிநாமாவை சமர்ப்பிக்க போவதாக கமல்நாத் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

''அண்மையில் பெங்களுரூவில் பணயக்கைதிகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் அழைத்து செல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர். உண்மை ஒருநாள் வெளியே வரும். மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்'' என்று கமல்நாத் குறிப்பிட்டார்.

''கடந்த 15 மாதங்களாக நான் மத்தியப்பிரதேச மாநில முதல்வராக மாநிலத்தின் நலனுக்காக உழைத்து வந்தேன். 15 ஆண்டுகளாக அவர்கள் செய்யாததை நான் செய்தேன். ஆனால், முதல் நாளில் இருந்து எனது ஆட்சிக்கு எதிராக இவர்கள் சதித்திட்டம் தீட்டிவந்தார்கள். எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்டனர். பல கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டது. மக்கள் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள்'' என்று கமல்நாத் மேலும் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரத்தில் மத்தியப்பிரதேச அரசியலில் தீவிர குழப்பம் ஏற்பட்டது.

ஜோதிராதித்யா சிந்தியா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஜோதிராதித்யா சிந்தியா

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, கடந்த சில நாள்களாக வீசிய அரசியல் புயலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர்.

இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத்துக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டார். இந்நிலையில் தனது பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :