கொரோனா போராளிகள்: கோவையில் ட்ரோன் மூலம் மருத்துவர்களுக்கு மலர் தூவப்பட்டதாக பரவிவரும் தகவல் உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதற்காக, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நேற்று காலை தகவல்கள் வந்தன.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளம் அல்லது கேரளாவின் திருவனந்தபுரம் விமானப்படை தளத்திலிருந்து கோவை சிங்காநல்லூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பட மூலாதாரம், Facebook
இந்நிலையில், சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. அதேபோல், கோவையிலும் மலர் தூவப்படும் என்ற எதிர்பார்ப்பில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் நேற்று மாலை 5 மணி முதல் காத்திருந்தனர்.
45 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் விமானப்படையினரின் ஹெலிகாப்படர்கள் வரவில்லை. இதனால், மருத்துவ குழுவினர் கைதட்டி உற்சாகம் செய்து கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்
இந்த நிலையில், விமானம் வராததால் சிறிய வகை ட்ரோன்களை பயன்படுத்தி மலர் தூவப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
மருத்துவர்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் அந்த பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது உண்மை அல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.
ஹெலிகாப்டரில் மலர் தூவுவதைப் படம் எடுக்க வந்த ட்ரோன் கேமராக்கள் அவை என்று கூறும் மருத்துவர்கள், ஹெலிகாப்டர் வராததால் மருத்துவர்கள் கைதட்டுவதை மட்டும் ட்ரோன் கேமிரா மூலம் படம் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

சூலூர் விமானப்படை
இதுகுறித்து கருத்து பெற சூலூர் விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம்.
அவர், "ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் மலர் தூவும் நிகழ்வு உறுதி செய்யப்படாமல் இருந்தது. மேலும், வானிலை மோசமாக இருந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது" என தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்த பின் இந்தியா எந்த திசையில் பயணிக்கும்?
- தனது பங்குகளை விற்ற பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் - என்ன காரணம் தெரியுமா?
- சிறப்பு ரயில்: வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகிறீர்களா? - இதனை படியுங்கள்
- தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
































