'பாபர் மசூதி' கட்டுமானத்திற்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் 'பாபர் அல்லது பாபர் மசூதி' என்ற பெயரில் எந்தவொரு மதக் கட்டமைப்பையும் கட்டுவதையோ அல்லது பெயரிடுவதையோ தடை செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சட்ட விவகாரங்கள் செய்தி நிறுவனமான லைவ் லா மற்றும் செய்தி முகமை பிடிஐ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளன.
லைவ் லாவின் கூற்றுப்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. 'பாபரின் பெயரில் மசூதி' கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக மனுதாரரின் வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார், அதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர், மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் 'பாபர் மசூதி' என்ற பெயரில் ஒரு மசூதிக்கு அடிக்கல் நாட்டினார்.
ஹுமாயூன் கபீர் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பரத்பூர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார்.
















