பாகிஸ்தான் தூதருக்கு தாலிபன் வெளியுறவு அமைச்சகம் சம்மன்

பட மூலாதாரம், AFP via Getty Images
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து, தாலிபன்கள் பாகிஸ்தான் தூதரை சம்மன் செய்து அழைத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் பாகிஸ்தான் தூதரிடம் ஒரு எதிர்ப்பு கடிதம் வழங்கப்பட்டது. பிபிசி பஷ்தூன் சேவை கூற்றுப்படி, தாலிபன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல்களை நடத்தி டஜன் கணக்கான பொதுமக்களைக் கொன்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சகம் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து ஆப்கானிஸ்தான் சார்பாக ஒரு எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பித்தது." என்று கூறப்பட்டுள்ளது.
"ஆப்கான் மண்ணைப் பாதுகாப்பது ஷரியாவின் பொறுப்பு என்று பாகிஸ்தான் தரப்புக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களின் எதிர்மறை விளைவுகளுக்கு மறுபக்கம் பொறுப்பாகும்." என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஏழு பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் கூறியது. இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பல பொதுமக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறுகிறது.

















