குவைத் மற்றும் பஹ்ரைன் இலக்குகளைக் குறிவைக்கும் இரானிய டிரோன்கள்

பட மூலாதாரம், Getty Images
இரானின் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து தனது சேமிப்பு கிடங்குகளில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக பஹ்ரைனின் பாப்கோ எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது என பிபிசி பாரசீக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனின் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் பாப்கோ எனர்ஜியும் ஒன்று.
முன்னதாக பிபிசி பாரசீக சேவை வெளியிட்ட செய்தியின்படி, இரானின் டிரோன் தாக்குதலில் குவைத்தின் இரு மின் நிலையங்கள் மற்றும் ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மின் நிலையங்களும் சுத்திகரிப்பு ஆலையும் தற்போது மூடப்பட்டுள்ளது. முன்னர் நடந்த தாக்குதல்களில் குவைத் அரசு அலுவலக வளாகம் சேதமடைந்த நிலையில் குவைத் பெட்ரோலிய அமைச்சகத்தில் தீ உருவானது.




















