இரானுக்காக பல கோடி மதிப்பிலான நன்கொடைகளை சேகரிக்கும் காஷ்மீர் மக்கள்
காஷ்மீரில் இரானுக்காக நடைபெற்று வரும் ஒரு உதவிப் பிரசாரத்தில் மக்கள் பங்களித்து வருகின்றனர். சமீப நாட்களில், பள்ளத்தாக்கு முழுவதும், குறிப்பாக ஸ்ரீநகர், பட்ஜாம், பாரமுல்லா மாவட்டங்களின் பல இடங்களில் இத்தகைய அரங்குகளைக் காண முடிகிறது.
“ஏறக்குறைய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இந்த நன்கொடை தற்போது காஷ்மீர் முழுவதும் திரட்டப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி நகைகளையும் கொடுக்கிறார்கள். செம்புப் பொருட்களின் குவியல்களும் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசாரத்திற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இங்குள்ள பல்வேறு அமைப்புகள் இதற்கான வேண்டுகோள்களை விடுத்துள்ளன” என்கிறார் காஷ்மீரை சேர்ந்த சமூக சேவகரான மீர் நசீர்.
நன்கொடைகளாக வரும் பணம், நகைகள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளூர் மசூதிகளில் சேகரிக்கப்படுகின்றன.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



