சென்னையில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் உணவு வழங்கும் சூஃபி தர் கோவில்

காணொளிக் குறிப்பு,
சென்னையில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் உணவு வழங்கும் சூஃபி தர் கோவில்

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சூஃபி தர் கோவில் சார்பாக கடந்த 38 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தன்னார்வலர்கள் உதவியுடன் தயாரிக்கப்படும் உணவுகள் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் விநியோகிக்கப்படுகிறது.

சூஃபி தர் என்பது சென்னையில் வசிக்கும் சிந்தி மொழி பேசும் மக்களால் நடத்தப்படும் கோவில். இந்த கோவிலில் சர்வ மத வழிபாடு நடைமுறையில் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு